முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை விடுவிக்கவே கூடாதாம்! சஜித் அணி

வடக்கு மாகாணத்தில் இராணுவக்கட்டுப்பாட்டிலுள்ள தேசிய பாதுகாப்புடன்
தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு
நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளால் தேசியப் பாதுகாப்பு
புறக்கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பொறுப்பின்றிச்
செயற்படுகின்றது.

30 ஆண்டு கால போரினால் அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டார்கள். போர்
முடிவடைந்து விட்டது என்று குறிப்பிட முடியாது.

தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை விடுவிக்கவே கூடாதாம்! சஜித் அணி | Land Should Not Be Released Team Sajith

தேசிய பாதுகாப்பின் பிரதான கேந்திர மையம்

எதிர்காலத்தில் போர் ஒன்று தோற்றம் பெறலாம். ஆகவே, அவதானத்துடன் செயற்பட
வேண்டியது அவசியம்.

வடக்கு மாகாணம் தேசிய பாதுகாப்பின் பிரதான கேந்திர மையமாக உள்ளது .

வடக்கில் காணிப் பிரச்சினை காணப்படுகின்றது. தனிப்பட்ட பாதுகாப்பை விட, தேசிய
பாதுகாப்பை கருத்தில்கொண்டே காணி விடுவிப்பு குறித்து தீர்மானம் எடுக்க
வேண்டும்.

தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை இராணுவத்தினர் வசம் வைத்துக்கொள்ள
வேண்டும். அவ்வாறான காணிகளை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது.

பாதுகாப்புக் காரணிகளுடன் தொடர்புடைய காணிகளை விடுவிப்பதற்குப் பதிலாக, காணி
உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அல்லது காணிகளுக்குப் பதிலாக நட்டஈடு வழங்க வேண்டும்.

தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை விடுவிக்கவே கூடாதாம்! சஜித் அணி | Land Should Not Be Released Team Sajith

வடக்கு மாகாணத்தில் மீண்டும் போர் 

வடக்கு மாகாணத்தில் மீண்டும் போர் ஒன்று தோற்றம் பெறாத வகையில் தேசிய
பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகள் முறையாக அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை விடுவிக்கவே கூடாது.

வடக்கு மக்களுக்கு அநீதி இழைக்க வேண்டும் என்று நாங்கள் குறிப்பிடவில்லை.

காணிக்குப் போதுமான அளவு நட்டஈடு வழங்க வேண்டும் என்று கூறுகின்றேன் .

வடக்கு வாக்குகளைப் பெறுவதற்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மாத்திரம்
முன்னுரிமை வழங்காமல் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி அரசு செயற்பட
வேண்டும்.

அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் தேசிய பாதுகாப்பு குறித்து தீர்மானங்களை
எடுக்க வேண்டும். அதுதான் நாட்டுக்குத் தேவை.”என்றார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.