முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு,
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சொகுசு வாகனம்
இலக்க தகடு அற்ற சொகுசு வாகனம் ஒன்றை மறைத்து வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டின் லொஹான் ரத்வத்த மற்றும் அவரின் மனைவி கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களை பிணையில் செல்ல நுகேகொட நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.