பொலன்னறுவையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெற்ற 30,24,900 ரூபாய் பணத்தை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபரிடம் 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெராயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது இடம்பெற்றுள்ளது.
பல மில்லியன் ரூபா
பொலன்னறுவை பொலிஸ் பிரிவின் பெந்திவெவ பகுதியில் மனம்பிட்டி பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து நேற்று நடத்தப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் பெந்திவெவ பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.