பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் வாலன வீதிப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கம்புருகமுவ, பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நபர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், பணத் தகராறு காரணமாக கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய 54 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

