இந்தியாவின் பிரபல கண்கட்டி வி்த்தை வித்துவான் விஜயகாந்த் இலங்கைக்கு வருகை தந்து கண்ணைக் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள் செலுத்தியமை நாட்டு மக்களை வியப்படைய வைத்துள்ளது.
அத்தோடு, குறித்த வித்துவான் மோட்டார் சைக்கிளை செலுத்திய போது அதன் பின்னால் இருந்த இந்திய யோகா கலைஞர் விவேக் என்பவர் யோகா கலைகளையும் காட்சிப்படுத்தி இருந்தார்.
இந்த நிகழ்ச்சியானது கொழும்பு புறநகர் பகுதியான கல்கிசையில் அமைந்திருக்கும் பரம தம் சேதிய விகாரையில் ஆரம்பிக்கப்பட்டு சிரிமல் உயன ஊடாக கலாபுர எனும் இடத்தில் அமைந்திருக்கும் இலங்கை மஜிக் மத்திய நிலையத்தில் நிறைவடைந்துள்ளது.

