மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய சட்டவிரோத விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ பிரதேச குற்றப்புலனாய்வு பணியகத்தினரால் நேற்று (13) இரவு இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆண் சந்தேகநபர் ஒருவரும் இரண்டு பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு, கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 55 வயதுடையவர் ஆணும், பெண் சந்தேகநபர்கள் 20 மற்றும் 24 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இவர்கள் வெயாங்கொட, கம்பஹா மற்றும் மடுல்சிம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

