மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் பேருந்தும்
லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 33 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (01) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிவியவருகையில், அம்பாறையிலிருந்து சாரதி உதவியாளர் உற்பட இருவருடன் திருகோணமலை நோக்கி பயணித்த
லொறியும் கம்பஹா – வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த உள்ளூர் சுற்றுலா பயணிகளுடன்
சேருவில ரஜ மஹா விகாரையை பார்வையிடுவதற்காக பயணித்த பேருந்தும் இந்த விபத்தை
எதிர்நோக்கியுள்ளது.
காவல்துறை விசாரணை
இந்த விபத்தில் காயமடைந்த காயமடைந்தோர் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
மேலும், விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்து
வருகின்றனர்.