ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் இன்று (01) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியப் பிரதமர் கவலை தெரிவித்தார்.
அத்தோடு, இலங்கையர்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வழங்கும் என்றும் கூறினார்.
நன்றி தெரிவிப்பு
இந்தநிலையில், இந்தியா வழங்கிய உதவிக்கு தனது மிகுந்த நன்றியைத் ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்துக் கொண்டார்.

மேலும், மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்களை விரைவாகவும் சரியான நேரத்தில் வழங்கிய இந்திய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

