நுவரெலியா (Nuwara Eliya) – ஹவஎலிய பகுதியில் சட்டவிரோத போதை பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு
பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பரிசோதகர் மேனன்
தலைமையிலான பொலிஸ் குழுவினர் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, 34 வயதுடைய
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரிடமிருந்து கஞ்சா கலவை செய்யப்பட்ட 300 மதனமோதகம்
போதை மாத்திரைகள் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி சட்டவிரோதமாக
நடத்தி வந்த ஆயுர்வேத மருந்தக விற்பனை நிலையம் ஒன்றிலே குறித்த மதனமோதக போதை
மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸாரின்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான்
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.