மலேரியா தொற்றால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(9) இடம்பெற்றுள்ளது.
நெடுந்தீவைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
குறித்த நபர் கடுமையான நோய் நிலையுடன் கடந்த ஆறு
நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை
பெற்று வந்தார்.

இந்தநிலையில் கடுமையான தொற்று மற்றும் பல்வேறு அங்கங்களின்
செயற்பாட்டு இழப்பால் அவர் நேற்றைய தினம் உயிரிழந்தார்.
மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், அவர் (Malaria Falciparum) மலேரியா
தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததை யாழ் போதனா வைத்திய சாலை உறுதிப்படுத்தியுள்ளது.

