குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கண்டுபிடிப்பதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
குறித்த நபர் நாடு முழுவதும் பலரை தொடர்பு கொண்டு பரிசுப் பொட்டலங்களை வழங்குவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார்.
கடுவெல, இஹல போமிரியவைச் சேர்ந்த 47 வயதான லியன அதுகோரலலாகே டான் நிரோஷன் சமீர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வங்கிக் கணக்கு
குறித்த நபர் மக்களை ஏமாற்றி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது கணக்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 – 8594911 அல்லது 011 – 2320140 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

