பொலிஸாரின் சமிக்ஞையை மீறிய மணல் ஏற்றிய டிப்பர் மீது பொலிஸார்
துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில்
நேற்றிரவு(7) சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி இவ்வாறு பயணித்த டிப்பர் மீதே
துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு
இரவு 9.30 மணியளவில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை புளியம்பொக்கனை சந்தியில்
வைத்து பொலிஸார் மறித்து சோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.

இதன்பொது பொலிஸாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்
மேற்கொண்டனர்.
பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் டிப்பர் வாகனம் காற்று போன
நிலையில் டிப்பர் வாகனத்தை விட்டு சாரதி தப்பியோடியுள்ளார்.
மணல் மற்றும் டிப்பர் வாகனத்தை மீட்ட பொலிஸார் சாரதியை தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





