முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மிருகத்தனமான காஷ்மீர் தாக்குதல்: கொழும்பில் வெடித்த போராட்டம்

கடந்த 22 ஆம் திகதி ஜம்மு – காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹால்காம் (Pahalgam) பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியிருந்தனர்.

இந்த சம்வத்தில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதல் உலகளவில் பாரிய அதிர்வலையை கிளப்பி இருந்தது.

இது கண்டிக்கத்தக்க விடயம் என கூறி சர்வதேச அரங்கில் பாரிய எதிர்ப்பு பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிராக கிளம்பி இருந்த நிலையில், தற்போது இது இந்தியா (India) மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் அச்சுறுத்தலுக்கு வழிவகுத்துள்ளது.

இந்தநிலையில், தற்போது இலங்கையில் (Sri Lanka) காஷ்மீர் தாக்குதலுக்கு எதிராக கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று (30) எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி (Chidambaram Karunanidhi) தலைமையில் கொழும்பில் (Colombo) இடம்பெற்றுள்ளது.

இதில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டதை ஏற்றுகொள்ள முடியாது எனவும், தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிலுள்ள தீவிரவாதம், மற்றும் குறித்த தாக்குதல், உலகலாளாவிய ரீதியில் தீவிரவாதம் என்பவை தொடர்பில் பலதரப்பட்ட விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில் 22.04.2025 அன்று 26
பொதுமக்கள் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.

மிருகத்தனமான காஷ்மீர் தாக்குதல்: கொழும்பில் வெடித்த போராட்டம் | Protest Colombo Against Pakistan Kashmir Offensive

இவர்களுக்கான
அஞ்சலி நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று
புதன்கிழமை (30.04.2025) யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தால்
ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிலையில் அதில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்
நா.வேதநாயகன் பங்கேற்றார்.

கொல்லப்பட்டவர்களுக்காக அஞ்சலி செலுத்திய ஆளுநர் தனது அஞ்சலி உரையில் இத்தகைய தாக்குதல்கள் கொடூரமானவை. கடந்த காலங்களில் நாங்களும் இதனை
அனுபவித்திருக்கின்றோம். கொல்லப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவதோடு,
இத்தகைய தாக்குதல்களை கண்டிக்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம
செயலாளர் இ.இளங்கோவன், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்றனர்.

மிருகத்தனமான காஷ்மீர் தாக்குதல்: கொழும்பில் வெடித்த போராட்டம் | Protest Colombo Against Pakistan Kashmir Offensive

மிருகத்தனமான காஷ்மீர் தாக்குதல்: கொழும்பில் வெடித்த போராட்டம் | Protest Colombo Against Pakistan Kashmir Offensive

https://www.youtube.com/embed/QmxCruuuLH0

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.