கிளிநொச்சி பூநகரி வாடியடி பகுதியில் இன்று (14.02.2025)
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஏ 32 பிரதான வீதியின்
வாடியடி சந்திக்கு அண்மித்த பகுதியில் இயங்கி வரும் விடுதியுடன் கூடிய
மதுபான சாலையை இடம்மாற்ற கோரியே போராட்டம் பூநகரி பிரதேச செயலகம்
முன்பாக இன்று பகல் இடம்பெற்றுள்ளது
போராட்டத்தினை தொடர்ந்து தங்களது கோரிக்கை அடங்கிய மகஜகர்களை பூநகரி பிரதேச செயலாளரிடம் மக்கள் கையளித்தனர்.