கிளிநொச்சி – ஆனையிறவு பிரதேசத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையினால்
உப்பு அறுவடையில் பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி – மாவட்டத்தின் ஆனையிறவு உப்பளத்தில் உள்ள உப்பு வயல்களில்
விளைவிக்கப்பட்ட உப்பு இந்த வாரத்தில் அறுவடை செய்யக்கூடிய நிலையில்
கானப்பட்டுள்ளது.
கடுமையான மழை வீழ்ச்சி
இருப்பினும், தற்போது பெய்த மழையினால் குறித்த உப்பு அறுவடை செய்ய முடியாது போயுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 140 மில்லி மீட்டர் வரையான மழை வீழ்ச்சி
ஆனையிறவு பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக உப்பு விளைவிக்கப்பட்ட உப்பு வயல்களில் மழை நீர்
தேங்கியதால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழிலாளர்களின் போராட்டமும் உப்பு அறுவடைக்கு பெரும்
பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெலிக்கப்படுகின்றது.








