யாழ்ப்பாணம் சுன்னாகம், ஊரெழு மேற்கு பகுதியில் சந்தேகநபர் ஒருவர் 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது
செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம்(5) குறித்த சந்தேகநபர் 41 வயதுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

