இளம் யுவதி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் அம்பாந்தோட்டை, கட்டுவனை பிரதேசத்தில் நேற்று
வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
காணித் தகராறில் உறவினர்களுக்கிடையிலான வாள்வெட்டு மோதலில் சிக்கியே மேற்படி
யுவதி உயிரிழந்துள்ளார்.
வாள்வெட்டு மோதல்
தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் 22 வயது யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளம் யுவதியும், அவரின் தந்தையும், சகோதரரும்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி யுவதி
உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், மேற்படி சம்பவம்
குறித்து உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.

