டிசம்பர் மாதத்தில் இதுவரை மொத்தம் 70,023 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகார சபைத் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா அதிகார சபை வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 15,152 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது 22.0% ஆகும். மேலும்,ரஷ்யாவிலிருந்து 8,033 பேர், ஜெர்மனியிலிருந்து 5,753 பேர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 5,216 பேர் மற்றும் 4,049 பிரெஞ்சு நாட்டினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2025 இல் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகள்
இதற்கிடையில், நவம்பர் மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,173,616 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில், 489,948 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 196,985 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், 166,626 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள், 137,012 பேர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் மற்றும் 125,720 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று SLTDA குறிப்பிட்டுள்ளது.

