யாழ்ப்பாணம் (Jaffna) நகர்ப் பகுதியில் இரண்டு இளைஞர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் புலனாய்வு
பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்.மாவட்ட பொலிஸ்
போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர் கைது
சம்பவத்தில், 22 மற்றும் 23 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 805 மில்லிக்கிராம் ஹெரோயின்
மீட்கப்பட்டுள்ளது.
மேலும் ,விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.