கொழும்பில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் வழங்கிய
தகவலின் அடிப்படையில் வவுனியா, செட்டிகுளத்தில் ஆயுதங்கள் மீட்கப்பட்ட
சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு
பிர்வு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட் கிழமை கொழும்பில் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் செட்டிகுளம், நேரியகுளம் மற்றும்
துட்டுவாகை ஆகிய பகுதிகளில் இரு வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இருவர் கைது
இதன்போது, 86 கைக்குண்டுகள், ரி56 ரக துப்பாக்கிக்கான ரவைகள்,
கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ்
போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில்
மீட்கப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் உட்பட இருவர் கைது
செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் மேலும்
தெரிவித்துள்ளனர்.

