வவுனியாவிலிருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம், திருகோணமலை – அநுராதபுரம் பிரதான வீதியின் வெல்வேரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது, இன்று(29) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
அதன்போது, பாதையை விட்டு விலகிய வாகனம் மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த சேதமடைந்துள்ளது.
மேலதிக விசாரணை
அத்துடன், வாகனத்தில் இருந்த சாரதி சிறு காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

