வெலிகம பிரதேச சபையின் தலைவரான ஐக்கிய மக்கள் சக்தியின் லசந்த விக்ரமசேகர இன்று(22.10.2025) காலை அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
பிரதேச சபைக்குள் தன்னுடைய கதிரையில் அமர்ந்திருந்த போது, கடிதம் ஒன்றில் கையெழுத்து வாங்க வந்ததாக தெரிவித்து வந்த இருவர் பிரதேச சபையின் தலைவரின் நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையிவ் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த முழுமையான சிசிடிவி காட்சி…

