யாழ் (Jaffna) மெரிஞ்சிமுனை – நாரயம்பதி மாதா கோயிலின் சுருவத்தை மதுபோதையில் உடைத்து
சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட எட்டு சந்தேக நபர்களையும்
14 நாள்கள் தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிவான் பிறப்பித்துள்ளார்.
கடந்த 25 ஆம் திகதியன்று நிறை போதையில் உடைத்து சேதப்படுத்தியதாக
குறித்த ஆலய நிர்வாகத்தினரால் ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டிருந்தது.
கைது நடவடிக்கை
இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன்
உள்ளடங்கலாக எட்டு பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

எஞ்சியோர்
தப்பிச்சென்றிருந்த நிலையில் காவல்துறையினர் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில்
இறங்கியுள்ளனர்.
இந்தநிலையில், கைதுசெய்யப்பட்ட எட்டு பேரையும் விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்கு
உட்படுத்தும் வகையில் நேற்றையதினம் ( 27) ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை
நீதிமன்றின் நீதிவான் முன்னிலையில் காவல்துறையினர் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
மதுப்போத்தல்கள்
இதன்போது ஊர்காவற்றுறை நீதிமன்றின் நீதிவான் குறித்த எட்டு நபர்களையும் எதிர்வரும்
14 நாள்களுக்கு தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்ருந்தார்.

முன்பதாக தனிமைத் தீவாக இருக்கும் குறித்த ஆலய. சூழலில் தேசிய மக்கள்
சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 20 பேர் அடங்கிய
குழுவினர் மதுபான விருந்தொன்றை முன்னெடுத்திருந்த நிலையில் ஆலயத்திற்கு
சுற்றுலா சென்றவர்களுடன் முரண்பட்டுக்கொண்ட காட்சிகளுடன் அதிகளவான
மதுப்போத்தல்கள், ஆடு ஒன்றின் தலை உள்ளுட்ட பல்வேறு தடையங்களும்
வெளியாகியிருந்தமை குறிப்புடத்தக்கது

