காணியொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொலை சம்பவம் ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் 46 வயதுடைய கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தாகவும், இதனால் அவரது கணவன் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர் அப்பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

