முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக நீதிமன்றால் உத்தரவிடப்பட்ட கணக்கியல் அறிக்கைகளை இதுவரையில் சமர்ப்பிக்கத் தவறியது தொடர்பில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக டிசம்பர் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தில் முன்னிலை

அப்போது, ​​சம்பவம் தொடர்பாக பிணையில் விடுவிக்கப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் (Arjun Aloysius) உள்ளிட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.

மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Court Order To Cbsl Financial Intelligence Unit

சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், நீதிமன்றத்தின் முன் சாட்சியங்களை சமர்ப்பித்து, இந்த வழக்கு இறுதியாக கடந்த வருடம் நவம்பர் மாதம் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

அன்றைய தினம் இந்த சந்தேக நபர்களின் நிறுவனங்கள் தொடர்பான கணக்கியல் அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதிலும், அந்த அறிக்கைகள் இன்றுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வழக்குத் தொடர வாதிகளுக்கு விருப்பமில்லை என்றால் இந்த வழக்கு தொடர்பாக தீர்மானமொன்றை எடுக்குமாறு நீதவானிடம் கோரினார்.

சந்தேக நபராக பெயரிடப்பட்டோர்

இந்தக் குற்றம் தொடர்பாக சட்டமா அதிபர் ஏற்கனவே தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Court Order To Cbsl Financial Intelligence Unit

முந்தைய நீதிமன்றம் தொடர்புடைய அறிக்கைகளை சமர்ப்பிக்க பிறப்பித்த உத்தரவு குறித்து இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரி நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த கொழும்பு தலைமை நீதவான், அடுத்த திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம், அந்நிறுவனத்தின் இயக்குநர் அர்ஜுன் அலோசியஸ், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் (Arjuna Mahendran) உள்ளிட்ட ஏழு பேர் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.