மற்றுமொரு அரச வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வைத்தியர் அர்ச்சுனாவை தாக்கியதாகவும் தாக்குதல் நடத்தியவருக்கு எதிராக நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) விபத்து பிரிவிற்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கிலான அமெரிக்க டொலர் பெறுமாதியான வைத்திய உபகரணங்கள் திருட்டுத்தனமாக வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தென்மராட்சி பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், குறித்த விடயம் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வந்த காரணத்தினாலேயே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா இவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரி இன்று பொதுமக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்தும் அவர்கள் தெரிவித்த விடயங்கள் கீழுள்ள காணொளியில்..
https://www.youtube.com/embed/7UOyE6c0prg