திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரியா வத்த
சுமத்ராகம கரையோர பகுதியில் சட்ட விரோத கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த பகுதிக்கு நேற்று மாலை கரையோர பாதுகாப்புத்
திணைக்களத்தின் உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவகர் சகிதம் சென்று கட்டிடம் தொடர்பான நிலவரங்களை ஆராய்ந்தனர்.
சட்ட விரோத கட்டிடம்
இந்த நிலையில், சட்டவிரோதமான முறையில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த
கட்டிட உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கரையோர
பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.

