சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண்
வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
நகைத்
தொழில் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினர்
ஆகியோரிடம் இருந்து கிடைக்கபெற்ற முறைப்பாட்டிற்கமைய கல்முனை தலைமையக பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு சோதனை நடவடிக்கை
மேற்கொண்டது.
இதன்போது, அம்பாறை
மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம் அருகில்
வைத்து சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணை கைது செய்தனர்.
பிணையில் விடுதலை
இவ்வாறு கைது
செய்யப்பட்டவர் இந்தியா- தமிழ்நாட்டை சேர்ந்த 48 வயதுடைய அழகச்சாமி
தமிழ்ச்செல்வி ஆவார்.
அத்துடன், குறித்த பெண்ணிடமிருந்து நகைகளும் ஏனைய சில
பொருட்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக
நபரை கல்முனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 1 இலட்சம் ரூபா சரீரப்பிணையில்
விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை
அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை(17) ஆம் திகதி வரை வழக்கு
மறுதவணை இடப்பட்டுள்ளது.
மேலும் இந்த விடயம் குறித்து கல்முனை
தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில்
பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் குழுவினர் தொடர் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப காலமாக சுற்றுலா விசாவில் இலங்கை வரும் இந்திய
வியாபாரிகள் வீடு வீடாகச் சென்று தங்க நகைகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.