கடுவலை பிரதேசத்தில் சற்று முன்னர் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுவலை அருகே வெலிவிட்ட பிரதேசத்தில் இன்று(8) மாலை குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய பொலிசார் சென்றிருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு
இதன்போது குறித்த சந்தேக நபர் பொலிஸாரைத் தாக்க முயன்றதன் காரணமாக அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

