ரஷ்யா(russia)- உக்ரைன்(ukraine) இடையே மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் பேரை முடிவிற்கு கொண்டு வரும் முயற்சியாக சவுதியில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்ததையில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இந்த போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு முன்னர் தமது தர்ப்பில் இராணுவ நிலையை மேம்படுத்தும் தீவிர செயற்பாட்டில் ரஷ்யா களமிறங்கியுள்ளது.
மீண்டும் கைப்பற்றப்பட்ட நகரம்
இதன்படி கடந்த ஓகஸ்ட் 2024ம் ஆண்டு எதிர்பாராத எல்லை தாண்டிய தாக்குதலுக்குப் பிறகு உக்ரைன் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட குர்ஸ்க் பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமான சுட்ஜாவை கைப்பற்றி உள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
குர்ஸ்க் பிராந்தியத்தில் தங்கள் கடைசி நிலையிலிருந்து உக்ரைன் இராணுவ வீரர்களை விரட்டியடிக்க, ரஷ்ய இராணுவம் நெருங்கி உள்ளநிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
களத்திற்கு நேரடியாக சென்ற புடின்
முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிராந்தியத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்திற்குச் சென்று அங்குள்ள இராணுவத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.