யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித
உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என சிலரை சந்தித்து
கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா.சாணக்கியன்,
செல்வம் அடைக்கலநாதன், சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மலர்தூவி அஞ்சலி
யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் வருகை தந்த ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் செம்மணி அணையா விளக்கு போராட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
அங்கு அவர் கொல்லப்பட்டோருக்காக மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடமும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடமும் அவர் கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களால் தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்றும் மனித உரிமைகள் ஆணையரிடம் கையளிக்கப்பட்டது.
https://www.youtube.com/embed/tXBPO5yriy4