பல அரச நிறுவனங்கள் திட்டமிட்ட முறையில் இலஞ்ச ஊழலில் ஈடுபடுவது குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரச திணைக்களங்களில் உள்ள அனேக நபர்களின் ஆதரவுடனேயே இது இடம் பெறுகின்றது எனவும் இலஞ்ச ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசநாயக்க தெரிவித்துள்ளார்
இலஞ்ச ஊழல்
இலஞ்சமாக பெற்றுக்கொண்ட பணத்தை இலஞ்சம் பெறுவதுடன் தொடர்புபட்ட அந்த திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களும் பங்கிட்டுக்கொள்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தில் விசேட சோதனையில் ஈடுபட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், சோதனையிடுவதற்கான அனுமதியை பெற்று தாங்கள் சோதனையிட்ட வேளை அதிகாரியொருவரின் அலுவலகத்தில் 4.1 மில்லியன் ரூபாய்களை மீட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

